Tuesday, November 15, 2011

31. நாறுகந்தம் புட்பமிவை நடு நிசியில் முகரோம்.காரணம் யாது?

  
31. நாறுகந்தம் புட்பமிவை நடு நிசியில் முகரோம்.காரணம் யாது?


        சித்த மருத்துவதில் நாறும் பூ வகைகளை இரவில் முகர கூடாது என கூறப்படுகிறது.இதனின் அறிவியல் விளக்கத்தை காண்போம்.




         இயற்கையில் பூக்களின் நறுமணம் என்பது இனப்பெருக்க நிகழ்வுக்கு பூச்சியினத்தை அழைக்கும் ஒரு சம்பிரதாயம்.இப்பூச்சியினத்தின் மூலம் பூக்களின் மகரந்தம் வேறு பூக்களுக்களுக்கு பரவும் ஒர் செயல்.



         பகல் நேரத்தில் பூக்களின் நறுமணம் முகரும்போது,அதில் உள்ள பூச்சிகளை கண்டு நீக்கி முகர முடியும். 

            
          இதே இரவில் பூக்களை முகரும்போது,அதிலுள்ள பூச்சிகளை கவனிக்க முடியாது.அவைகளால்,தீமைகள் விளையக்கூடும்.

          மேலும்,இரவு நேரம் இயல்பகவே கபம் அதிகமான நேரமாதலால்,உடலுக்கு நறுமணம் மூலம் பினீசம்,தலை வலி முதலிய தீமைகள் விளையும்.

        எனவே,நாறுகந்தம் புட்பமிவை நடு நிசியில் முகரோம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment