Wednesday, November 23, 2011

45.உணவின்போது, கருவேப்பிலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.ஏன்?


  
45.உணவின்போது, கருவேப்பிலை  நீக்காமல் சாப்பிட வேண்டும்.ஏன்?

        கருவேப்பிலை பொதுவாக உணவு பதார்த்தங்கள் செய்யும்போது,சுவை அதிகரிக்க தாளிப்பு பொருளாக சேர்க்கப்படுவது தமிழ் நாட்டு வழக்கம்.


       அங்ஙனம் சேர்க்கப்படும் கருவேப்பிலை சாப்பிட படாமல் ஒதுக்கிவைக்கப்படுவது இயல்பாக நடைபெறும் செயல்.

           கருவேப்பிலை வெறும் உணவின் சுவை கூட்டு வதற்கு மட்டும் சேர்க்கப்படவில்லை.

            கருவேப்பில்லையில் இருக்கும் மருத்துவ குணத்திற்காகவே சேர்க்கபட்டுள்லாஊ என்கிறதை நவீனஆராய்ச்சிகள் நீரூபிக்கின்றது.

            கருவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.இதனால் இரத்த குறைவு நோய்க்கு சிறந்த பலனளிக்கும்.

             மேலும் கருவேப்பிலை உடலில் சூட்டை குறைத்து,முடி கொட்டுவதையும் தடுக்கிறதாம்.
மேலும் கருவேப்பிலை நீரிழிவு நோயில் நன்றாக செயல்படுவதை நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment